அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை (பகுதி -2)

பிரதான நுழைவு வாயிலான ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றால் வலது பக்கத்தில் ஆயிரங்கால் மண்டபமும் இடது பக்கத்தில் கம்பத்திளையனார் சந்நிதியும் உள்ளது .இராசகோபுரத்தின் வடதிசையில் உள்ள வாயிலில் "சித்திரமணி மண்டபம்" உள்ளது .ஆயிரங்கால் மண்டபத்தின் அருகில் ஸ்ரீ பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதியில் ரமண மகரிஷி தமது இளம் வயதில் தியானம் இருந்த இடம் அமைந்துள்ளது .ஆனந்த நிஷ்டையில் அசையாது இருந்து தியானம் செய்த இடம் இதுவாகும்.எதிரே உள்ள கம்பத்து இளையனார் திருக்கோவில் அருணகிரிநாதருக்கு காட்சி கொடுத்து முருகபெருமான் அமர்ந்த இடமாகும் .இச்சன்னதியின் தென்புறமாக நான்கு புறங்களிலும் திரு மாளிகை பத்தி உடையதாய்ச் சிவகங்கை தீர்த்தம் உள்ளது.

திருக்குளத்தின் வடமேற்கில் சர்வ சித்தி விநாயகர் கோயில் உள்ளது.இவரை வழிபட்டு கீழே இறங்கினால் பெரிய நந்தியைக் காணலாம்.அதற்கு முன் உத்திராட்ச மண்டபம் உயரமாக காணப்படும்.இதைகடந்து செல்லும்பொது இடதுபக்கம் கல்யாண சுந்தரேஸ்வரர் சந்நிதியும் வலது பக்கம் முருகபெருமான் சந்நிதியும் உள்ளது.இன்னும் சற்று உள்ளே வலதுபக்கம் சென்றால் வன்னியமரத்து விநாயகர் திருக்கோயிலும் உள்ளது.

பெரிய நந்திகேசுரருக்கு நேராக வல்லாள மகாராசா கோபுரம் உள்ளது.அருணகிரிநாத பெருமான் இக்கோபுரத்தின் மீது ஏறி தன்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ள கீழே விழுந்தபோது அவரை முருகபெருமான் தடுத்து ஆட்கொண்ட இடமாகும் .இத்திருக்கோயிலில் முருகபெருமான் இரண்டு இடங்களில் காட்சி கொடுத்து தலத்திற்கு சிறப்பு செய்துள்ளார் .

மூன்றாம் கோபுரம் கிளிகோபுரம் ஆகும்.அருனகிரிநாத பெருமான் பூத உடலை விட்டு கிளியாக மாறி பரிசத மலர் கொண்டு வரசென்றார். திரும்பி வரும்போது தன உடல் இல்லாததுகண்டு கிளி உருவிலே "கந்தர் அனுபூதி "பாடிய இடம் இக்கோபுரம் ஆகும் .இன்றும் இக்கோபுரத்தில் நிறைய கிளிகள் வாழ்வது சிறப்பு. 

கிளிகோபுர வாயிலை கடந்து சென்றால் மூன்றாம் பிரகாரத்தில் பதினாறுகால் மண்டபம் உள்ளது.இதற்கு தீபதரிசன மண்டபம் எனப்பெயர்.இங்கு திருக்கார்த்திகை நாளில் பஞ்ச மூர்த்திகள் நிற்க மலை மீது தீபம் ஏற்றும் விழா நடைபெறும்.இம்மண்டபம் மங்கையர்க்கரசி என்ற சிவனடியார் கட்டிசிறப்பு பெற்றார்கள் .மூன்றாம் பிரகாரத்தின் தென்புறம் ஸ்தல விருட்சமான மகிழமரமும் ,பின்புறம் அருணகிரி யோகீஷ்வர் சந்நிதியும் ,வடக்கே அருள்மிகு அம்பாள் சந்நிதியும் ,நேர் எதிரே காளத்தீஸ்வரர் சந்நிதியும் ,அருகில் யாக சாலையும் அமைந்துள்ளது.

கொடிமரத்தை தாண்டி உள்ளே சென்றால் வடக்கே சுப்பிரமணி  சுவாமி,தெற்கே விநாயக பெருமானும் உள்ளனர்.அதை கடந்து உள்ளே சென்றால் இரண்டாம் பிரகாரம் அமைந்துள்ளது.இப்பிரகாரத்தில் சிவாலயத்தில் அமைய வேண்டிய அனைத்துபரிவார தெய்வங்களின் சந்நிதிகளும் உள்ளன.

நந்தியை வழிபட்டு அண்ணாமலையார் சந்நிதிக்கு செல்லும் முன் பிரதோஷ நந்தி உள்ளது.துவார பாலகர்களை தரிசித்து கருவறையின் முன்புறமுள்ள அர்த்த மண்டபத்தில் நின்று தரிசிக்கும் போது அருணாசலேசுவரர் அருளே திருமேனியாக சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார்.
(தொடரும்..)  


No comments

Powered by Blogger.