ஸ்ரீ பெரியாண்டவர் ஆலயம், திருநிலை கிராமம்,காஞ்சிபுரம் மாவட்டம்
அன்பர்களை காக்க வந்த பெரியாண்டவர்
ஸ்ரீ பெரியாண்டவர் ஆலயம் திருநிலை கிராமம் , ஓரகடம் போஸ்ட் திருக்கழுகுன்றம் வழி , செங்கல்பட்டு வட்டம் ,காஞ்சிபுரம் மாவட்டம் .pin-603109,ஆலய தொடர்புக்கு --- 9842740957
ஸ்ரீ பெரியாண்டவர் ஆலயம் திருநிலை கிராமம் , ஓரகடம் போஸ்ட் திருக்கழுகுன்றம் வழி , செங்கல்பட்டு வட்டம் ,காஞ்சிபுரம் மாவட்டம் .pin-603109,ஆலய தொடர்புக்கு --- 9842740957
சுயம்புலிங்கம் மூலவர்
பெரியாண்டவர் ஆலயம் திருநிலை
தொண்டை மண்டலம் என்று அழைக்கப்படும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள திருகழுக்குன்றத்தில் இருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இயற்கை அன்னை இயல்பாக அமர்ந்து வசிகரிக்கும் மாட்சிமை பொருந்திய திருநிலை கிராமத்தில் பெரியாண்டவர் சிவன் ஆலயம் அமைந்துள்ளது . ,மலை மற்றும் காடுகளாலும் வயல் வெளியில் சூழபட்டு இருந்த சிவலிங்கத்திற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சிவலிங்கத்தை ஈசன் பன்றி உரு கொண்டு அடர்ந்த புதரினால் மூடபட்டு இருந்த இடத்தை அடையலாம் காட்டி மறைந்ததாக கூறும் அந்த ஆலயத்தின் வரலாறு என்ன?
தொண்டை மண்டலம் என்று அழைக்கப்படும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள திருகழுக்குன்றத்தில் இருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இயற்கை அன்னை இயல்பாக அமர்ந்து வசிகரிக்கும் மாட்சிமை பொருந்திய திருநிலை கிராமத்தில் பெரியாண்டவர் சிவன் ஆலயம் அமைந்துள்ளது . ,மலை மற்றும் காடுகளாலும் வயல் வெளியில் சூழபட்டு இருந்த சிவலிங்கத்திற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சிவலிங்கத்தை ஈசன் பன்றி உரு கொண்டு அடர்ந்த புதரினால் மூடபட்டு இருந்த இடத்தை அடையலாம் காட்டி மறைந்ததாக கூறும் அந்த ஆலயத்தின் வரலாறு என்ன?
அசுரர்களை அழிக்க மனித அவதாரம் ஈசன் எடுத்தால் மட்டுமே அழிக்கமுடியும் என்ற சுழலில் ஒரு முறை பார்வதி தேவி ஈசனின் அவதாரம் வேண்டி ஒரு நாழிகை மனிதனாக பிறப்பாய் என்று பார்வதி தேவி கொடுத்த சாபத்தின் காரணமாக சிவபெருமான் பூமியில் மானிடனாக அவதரிக்க வேண்டி இருந்தது. அவர் பூமிக்கு வந்து தன் நிலை மறந்து அங்கும் இங்குமாக திகம்பரநிலையில் மூவேழு உலகமும் அலைந்து திரிந்து கொண்டு இருந்தார். அவர் அந்த நிலையில் இருந்ததினால் அனைத்து இயக்கங்களும் தடைப்பட்டன. தேவர்கள் கவலை அடைந்தனர். அவர்கள் பார்வதியிடம் சென்று ஈசனை ஆட்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ள பார்வதி தேவியும் சுற்றி அலைந்து கொண்டு இருந்த சிவபெருமானின் நிலையைக் கண்டு மனம் வருந்தினாள். ஆனாலும் சாப விமோசனம் குறிப்பிட்ட காலத்தில்தானே நடக்க முடியும். உமையவள் அங்காலபரமேஸ்வரியாக அவதாரம் கொண்டு தன் கையில் இருந்த சூலாயுதத்தை கீழே வீசி எரிய அந்த சூலாயுத ஜோதி ஒளியை கண்டு ஈசன் கிழே இறங்கி வந்து தன் பாதத்தை ஒருநிலையில் திருநிலை யாய் பதிக்க உமையவள் அங்காலபரமேஸ்வரி அவ்விடத்திலேயே வணங்கி நின்றாள். ஒரு நாழிகை நேரமும் முடிய மனிதனாய் வந்தவர் சிவமாய் உறுமாறி தோன்றினார். மேலும் பெரிய மனிதனாக இவ்வுலகை வலம் வந்த ஆண்டவராகிய நீவிரே இன்று முதல் பெரியாண்டவர் என்று அழைக்கப்படுவீர் என உமையவள் கூறினாள். இவ்வார்தையை கேட்ட தேவர் முதலானோர் பெரியாண்டவா பெரியாண்டவா எனக் கூறி அழைத்து அவர் பாதத்தில் மலர் தூவி வாழ்த்தினர்.
.அந்த இடத்திலேயே தான் சிவலிங்கமாக நிலைக் கொள்ள அந்த இடத்தின் பெயர் திருநிலை என ஆயிற்று. சூலாயுதம் விழுந்த இடத்தில் முதலில் ஜோதி வடிவமாகக் காட்சி தந்தார். அதன் பின்னரே லிங்க வடிவம் பெற்று சுயம்பு லிங்க உருவில் அங்கு அமர்ந்தார். மனித வடிவில் உலகை வளம் வந்தபோது அவரை சுற்றி இருபத்தி ஒரு சிவ கணங்களும் அவருக்குப் பாதுகாப்பாக எவர் கண்களிலும் படாமல் மறைந்த நிலையில் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தனர். அதை குறிக்கும் வகையில்தான் அங்கு இருபத்தி ஒரு சிவலிங்கங்கள் உள்ளனவாம். அவை எப்படி ஏற்பட்டது என்றால் அங்காலபரமேஸ்வரி தேவியின் கையில் இருந்த சூலாயுதம் பூமியின்மேல் கீழே விழுந்தபோது அந்த இடத்தில் இருந்த மண்ணில் மறைந்தவாறு ஈசனை பாதுகாத்து வந்து கொண்டு இருந்த சிவ கணங்கள் இருபத்தி ஒரு மண்கட்டிகளாக தெறித்து சூலாயுதத்தை சுற்றி விழ அவை சிவன் பதம் பூமியின்மேல் பதித்த உடன் மீண்டும் இருபத்தி ஒருசிவகணங்கலாக தோன்றி அதிசயமாக அருளின . அது மட்டும் அல்ல அவரைத் தொடர்ந்து அவருக்குக் காவலாக மனித உருவிலேயே நந்தியும் வந்து கொண்டு இருந்தாராம். ஆகவே சிவன் நிலையாக நின்ற இடத்தில் நந்தி தேவரும் அதே மனித உருவில் நின்று விட்டதினால்தான் நந்தி தேவர் நின்ற நிலையில் மனித கோலத்தில் அந்த ஆலயத்தில் காட்சி தருகிறார். ஆலயத்தின் இன்னொரு விசேஷம் என்ன என்றால் அங்கு சிவபெருமானின் சன்னதிக்குப் பக்கத்தில் பார்வதி தேவி அங்காள பரமேஸ்வரியாக இருந்து கொண்டு பக்தர்களுக்கு அருள் புரிகிறாள். அவள் பெயர் அங்கு திருநிலை நாயகியாம். அமர்ந்த நிலையில் அவள் காட்சி தருகிறாள். அந்த ஆலயத்துக்கு அருகில் உள்ள சித்தமிர்த புனிதக் குளத்தில் குளித்துவிட்டு ஆறு வாரங்கள் பெரியாண்டவர் மற்றும் அங்காள பரமேஸ்வரி சன்னதிக்குச் சென்று பூஜை செய்து வணங்கி வந்தால் நடக்காத காரியங்கள் கூட நடைபெறுமாம். குழந்தைபேறு பெற இங்கு வந்து வணங்குவது விசேஷமாகக் கருதப் படுகின்றது. மேலும் அந்த இடத்துக்கு பல முனிவர்களும் ரிஷிகளும் வந்து சிவனை வணங்கிச் சென்று உள்ளனர். அந்த இருபத்தி ஒன்று சிவ லிங்கங்களும் சிவ பெருமானான மூல லிங்கமான பெரியாண்டவரை அங்கு வணங்கி பூஜிப்பதான ஜதீகமும் உள்ளது. சிவபெருமான் மனித உருவில் வந்ததினால் அவர் காலடி நேரடியாகப் பட்ட தலம் இது. இன்றும் பலஆயிரம் ஆயிரம் குலதெய்வமாக கொண்ட குடும்பங்கள் இருபத்தி ஓர் மண் உருண்டைகள் செய்து லிங்கத்தை சுற்றி வைத்து வணங்கி செல்வதை காணலாம் . இங்கு விநாயகரும் மனித வடிவில் இரு கைகளுடன் நின்ற கோலத்தில் அருள் வதையும் அவருக்கு திருநீற்றால் மட்டுமே அபிஷேகம் நடைபெருவதும் அவற்றை உட்கொண்டு பூசுவதால் நோய் விலகி செல்வம் ,கல்வி அறிவு கிடைப்பதாக பக்தர்கள் கூறுவதை காணலாம் .நாமும் பெரியாண்டவர் ஆலயம் செல்வோம் வளம் பல பெறுவோம்
மேலும் விபரங்களுக்கு
மேலும் விபரங்களுக்கு
............................................................................................................
ஜீவிதா .E
நெம்மேலி கிராமம் &போஸ்ட் ,
பஞ்சாயத்து ஆபிஸ் ரோடு
செங்கல்பட்டு வழி ,
காஞ்சிபுரம் மாவட்டம் ,
பின்-- 603109
செல்-- 9940114520௦
ஜீவிதா .E
நெம்மேலி கிராமம் &போஸ்ட் ,
பஞ்சாயத்து ஆபிஸ் ரோடு
செங்கல்பட்டு வழி ,
காஞ்சிபுரம் மாவட்டம் ,
பின்-- 603109
செல்-- 9940114520௦
.............................................................................................................................
Leave a Comment