லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில், தளபதி சமுத்திரம்,கீழூர்

Mr.Balasubramanian from THALAPATHISAMUDRAM KEELOOR near by VALLIOOR send the following temple informations in email

அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்



மூலவர் : லட்சுமி நாராயண பெருமாள் 
உற்சவர்ஸ்ரீ நிவாஸன்
தல விருட்சம்துளசி
தீர்த்தம் :கிணறு தீர்த்தம்
ஆகமம்/பூஜைவைகானஸம்
பழமை : 1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :பெருமளஞ்சி(பெரும்வளம்செய்).
ஊர்தளபதி  சமுத்திரம்,கீழூர்
மாவட்டம் : திருநெல்வேலி
மாநிலம் : தமிழ்நாடு
திருவிழா:
வருஷாபிஷேகம்,கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி, வைகுண்ட ஏகாதசி,புரட்டாசி சனிக்கிழமை கருடசேவை,திருக்கார்த்திகை தீபம்,மார்கழி மாதம் பஜனை .
தல சிறப்பு:
  புதன், சுக்ரன் பரிகார தலம்.
திறக்கும் நேரம்:
காலை 7மணி முதல் 10 மணி வரை, மாலை மணி 6 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
முகவரி:
அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்,தளபதி  சமுத்திரம்-கீழூர்,திருநெல்வேலி-627101.
பொது தகவல்:
மார்கழி மாதம் 30 நாட்களும் காலை 5 மணி முதல் 7.30மணி  வரை  திருப்பாவை திருப்பள்ளிஎழுச்சி  மற்றும் பஜனை நாமசங்கீர்த்தனமும் நடைபெறுகிறது.எல்லா சனி மற்றும் ஞாயிறு தோறும் மாலை 6.30 முதல் 8.30 வரை மாலை பஜனை நடக்கிறது.வருஷாபிஷேகம் மற்றும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை தோறும்  கருடசேவை நடைபெறுகிறது.
பிரார்த்தனை:
           திருமணத் தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், கடன் பிரச்சனை, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பெற, உடல்நலம் குன்றியோர், தொழில் பாதிப்படைந்தோர் இக்கோயிலுக்கு வந்து முறையாக பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.இங்குள்ள ஆஞ்சநேயரை மனமுருகி வேண்டினால் சனிதோஷ நிவர்த்தி ஏற்படுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.இங்கு வேண்டிக்கொண்டால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,கருடசேவை, திருவோண நட்சத்திரத்தில் பாயாச நைவேத்யம் படைத்தல், துலாபாரம் மற்றும் திருவாபரணங்கள் செலுத்துதல்.பிரார்த்தனை நிறைவேறியதும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலையும், வடை மாலையும் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
கிழக்கு நோக்கி அமைந்துள்ள ஆலயத்தின் முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் அழகான சிறப்பு மண்டபம். மண்டபத்தின் நடுவே கருடாழ்வார் பெருமாளைப் பார்த்தபடி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அதையடுத்து மகாமண்டபம். மகாமண்டபம் நுழைவாயிலை இருபக்கமும் கிருஷ்ண பரமாத்மா திருமேனி அலங்கரிக்க மகாமண்டபத்தின் முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் வலதுபுறம் ஆஞ்சநேயரின் சன்னதி உள்ளது. அடுத்து அர்த்த மண்டப நுழைவாயில் உள்ளது. அடுத்துள்ள கருவறையில் பெருமாள், அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் என்ற திருநாமத்துடன் கீழ்திசை நோக்கி சேவை சாதிக்கிறார்.மூலஸ்தானத்தில் பெருமாள், மடியில் மகாலட்சுமியை வைத்தபடி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். பெருமாள், புதன் கிரகத்திற்கும், தாயார் சுக்ரனுக்கும் அதிபதி ஆவர். எனவே இத்தலம், "புதசுக்ர பரிகார க்ஷேத்ரம்' என்றும் அழைக்கப்படுகிறது.புதன் கிரக தோஷம் உள்ளவர்கள் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தும், சுக்ரதோஷம் உள்ளவர்கள் மகாலட்சுமிக்கு குங்கும அர்ச்சனை செய்தும் வழிபடுகிறார்கள். பாற்கடலில் மகாலட்சுமி தோன்றி, பகவான் விஷ்ணுவை கணவராக அடைய விரும்பி அவரையே அடைந்தாள்.தேவாசுரர் கூட்டத்தில் மகாலட்சுமி தன்னை தேர்ந்தெடுத்ததை சிறப்பிக்கும் பொருட்டு, அப்பெண்மைக்கு மதிப்பளிக்கும் விதத்தில், விஷ்ணு அவளைத் தன் இடது தொடை மீது அமர்த்தி தாமரை மலர் மேல் அமர்ந்து லட்சுமி நாராயணனாக காட்சி அளித்தார்.அலங்காரப் பிரியரான பெருமாளுக்கு இங்கு நடக்கும் அலங்கார ஆராதனைகள் அற்புதமானவை.திருமணத்தடை உள்ள பெண்கள் சுவாமி முன்பு பச்சரியின் மீது தேங்காயில் நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள்.இங்கு வேண்டிக்கொண்டால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தல வரலாறு:
சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்த ஆலயம்.திருமால் அமர்ந்த நிலையில் உள்ள கோயில்கள் தமிழகத்தில் மிகவும் குறைவு. இவ்வகையில் இங்கு பெருமாள் அமர்ந்த நிலையில் அருள்பாலிக் கிறார்.மகாலட்சுமியை தன் மார்பில் சுமந்திருக்கும் திருமால் அவளைத் தமது மடியில் இருத்தியபடி காட்சிதரும் திருத்தலங்களில் இதுவும் ஒன்று. தன்னை வணங்கும் பக்தர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும், திருமணமான தம்பதிகள் மணம் ஒன்றி வாழவும் திருவுள்ளம் கொண்ட பெருமாள் இங்கு எழுந்தருளி அருள்பாலிப்பதாக தலவரலாறு கூறுகிறது.
சிறப்பம்சம்:
பெருமாள் இத்தலத்தில் தாயாரை இடது தொடையில் அமர்த்தியபடி அருள்பாலிப்பது சிறப்பு.
அதிசயத்தின் அடிப்படையில்: புதன், சுக்ரன் பரிகார தலம்.


இருப்பிடம் :
அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்,தளபதி  சமுத்திரம்-கீழூர்,திருநெல்வேலி-627101.

பேருந்து வழிதடம்:
திருநெல்வேலி மற்றும் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் தடம் எண் 565திருநெல்வேலி/ நாகர்கோவிலில் பேருந்துகள் அனைத்தும் தளபதிசமுத்திரம் கீழூர் நின்று செல்லும்.
வள்ளியூர் இருந்து புறப்படும் பேருந்துகள்:
9L சிறுமளஞ்சி,மினிபேருந்துகள்(STN,அன்னை அருள்).

இறங்கும் இடம்: தளபதி  சமுத்திரம்,கீழூர்.
அருகிலுள்ள ரயில் நிலையம் வள்ளியூர்-8km,நாங்குநேரி-7km

அருகிலுள்ள விமான நிலையம் :
மதுரை, திருவனந்தபுரம் .

தங்கும் வசதி :
வள்ளியூர்,திருநெல்வேலி

திருநெல்வேலி-ஹோட்டல் ஆர்யாஸ் போன்: 0462-2339002
வள்ளியூர்-ஹோட்டல் வெங்கடேஸ்வரா லாட்ஜ்-0462-235174









1 comment

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பகிர்வுக்கு நன்றி...

Powered by Blogger.