வேல் கோட்டம் - தியான மண்டபம்

வெற்றிவேல்,வீரவேல் ,ஞானவேல் என்று பலவாறு புகழப்படும் முருகபெருமானின்  வேலுக்கு என்றும் தனிச்சிறப்பு உண்டு .சங்க காலத்தில் இருந்தே வேல் வழிபாடு நடந்து வருகிறது .இத்தகைய வேலுக்கேன தனி கோயில் ஒன்று கோவை மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ." வேல் கோட்டம் - தியான மண்டபம் " என்று அழைக்கப்படுகிறது இத்திருகோயில்.
6  3/4 அடி உயரம் கொண்ட சிற்ப வேலை பாடு மிக்க வேல் கருவரையில் பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ளது.வேலின் தண்டு பகுதியில் பஞ்ச பூதசக்கரங்கள் செதுக்கபட்டுள்ளது. வேலின் முகப்பு பகுதியில் வெளிச்சம் விழும் விதத்தில் விதானத்தில் சிறு துவாரம் அமைக்கப்படுள்ளது முன்மண்டபம் அறுகோண வடிவில் "சரவணபவ " என்னும் ஆறு எழுத்தை குறிக்கும் வடிவில் அமைந்துள்ளது. தியானம் செய்ய ஏற்ற வகையில் இங்கு அமைதி தவழ்கிறது.
மருதமலை செல்லும் பக்தர்கள் தவறாமல் செல்ல வேண்டிய இடம் .

No comments

Powered by Blogger.