அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில்,கோவில் பாளையம்
கோவை மாநகரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோவில் பாளையம் என்ற சிற்றூர் .பேருந்து நிலையத்தில் இருந்து சில நிமிட நடை தூரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில்.
தொன்மை வாய்ந்த இந்த திருகோயில் எமனின் சாபம் நீக்கிய சிறப்பு வாய்ந்த தலம் என்ற சிறப்பு பெற்றது .மேலும் இங்குள்ள குருபகவான் இந்த கோயிலின் சிறப்புக்கு சிறப்பு சேர்க்கிறார். ஆம் , இந்த தலம் அதி சிறப்பு வாய்ந்த குரு பரிகார ஸ்தலம் ஆகும். ஆளுயர குரு பகவான் சிலை கண்டதும் நம் மனதில் சொல்ல இயலாத அமைதியை ஏற்படுத்தும் .ஒவ்வொரு குரு பெயர்ச்சியும் இங்கு மிக சிறப்பாக கொண்டாடபடுகிறது.
இங்கு சூரியன் ,சந்திரன், குரு,சனீஸ்வரர் என தனி தனி சன்னதி அமைந்திருக்கிறது
Leave a Comment