ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம், திருகோணமலை, இலங்கை





ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய முகப்புத் தோற்றம்..


11ம் நூற்றாண்டிலேயே இந்த ஆலயம் சிறப்புற்று விளங்கியமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சரித்திரப் பேராசிரியர் திரு.செ.குணசிங்கம் அவர்களின் நூலக் குறிப்புகளில் இருந்து அறியமுடிகிறது.

இந்த ஆலயத்தில் நடைபெறும் விழாக்கள்...

மகோற்சபம்
வைகாசிப் பொங்கல்
நவராத்திரி
கும்பவிழா
கேதாரகௌரி விரதம்


உற்சவம் ஒன்றின் போது..

பங்குனி உத்தரத்தைத் தீர்த்தோற்சப தினமாகக்கொண்டு பத்துநாட்கள் மகோற்சபம் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் இரதோற்சபம் நடைபெறுவதோடு, பங்குனி உத்தரத்தன்று அம்பாள் கோணேசப் பெருமாள் எழுந்தருளியிருக்கும் கோணமலையின் அடிவாரத்திலுள்ள கடற்கரையில் அதிகாலையில் தீர்த்தத் திருவிழா இடம்பெறும்.

No comments

Powered by Blogger.