ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் அவதார திருத்தலம்- புவனகிரி
புவனகிரி - சிதம்பரத்துக்கு அருகில் அமைந்துள்ள சிற்றூர் .இங்கு தான் மந்திராலய மகான் பூஜ்யாய ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் அவதரித்ததாக நம்பபடுகிறது. இதை தமிழக அரசாங்கமும் ஆராய்ந்து முறைப்படி சுவாமிகள் புவனகிரி பட்டி சந்தில் தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்தில் தான் பிறந்தார் என அறிவித்து அதற்க்கு சான்று அளித்துள்ளது . சுவாமிகள் அவதரித்த வீட்டை 1989 - ல் முறைப்படி கோயிலாக கட்டி கும்பாபிஷேகம் செய்யப்பட்டு இன்று வரை தினசரி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. மீண்டும் கடந்த 25.06.2008 - ல் மஹா கும்பாபிஷேகம் முறையாக நடத்தப்பட்டது .
வருடம் தோறும் ஆவணி மாதம் சுவாமிகள் பிறந்த நாள் ஆராதனை சிறப்பாக கொண்டாடபடுகிறது .நவராத்திரி விழ பத்து தினங்களுக்கு கொண்டாடபடுகிறது.
ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி,ஸ்ரீ ஹனுமான் ஜெயந்தி,ஸ்ரீ ராம நவமி போன்ற வைபவ விழாக்களும் நடை பெறுகின்றன .
தினசரி கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 6.30 மணி முதல் 11.30 வரை - மாலை 4.00 மணி முதல் 8.00 வரை.
ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி,ஸ்ரீ ஹனுமான் ஜெயந்தி,ஸ்ரீ ராம நவமி போன்ற வைபவ விழாக்களும் நடை பெறுகின்றன .
தினசரி கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 6.30 மணி முதல் 11.30 வரை - மாலை 4.00 மணி முதல் 8.00 வரை.
Leave a Comment