காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயம் இலங்கை...

அமை விடம் :-

காரைநகர் மேற்கு வீதியில் வாரிவளவு என்னும் பத்தியில் உள்ள குபபரை புலத்தில் 1880ம் ஆண்டு சுப்புடையார் பரம்பரையினரால் மண் கோவில் ஒன்று அமைத்து மூலவராக விநாயக பெருமானை எழுந்தருள வைத்து வழிபட்டனர்.

சுப்புடையார் பரம்பரையின் வழித்தோன்றல்களாகிய அமரர் இராமநாதர் , தம்பையா ஆலயம் சுண்ணாம்புக் கற்கள் கொண்டு புதுப்பிக்கப் பட்டது.

தம்பையா அவர்கள் அமரத்துவமடைய அவரது இளைய புதல்வர் திரு. கணேசபிள்ளை அவர்கள் 1967 ஆம் ஆண்டு வரை தனது சகோதரர் அமரர் சுப்ரமண்யம் அவர்களுடன் இணைந்து ஆலயத்தை சிறப்பாக பராமரித்து வந்தார். கணேசபிள்ளை அவர்கள் காலத்தில் தான் கோவிலில் சீமேந்து கட்டடங்கள் கட்டப்பட்டதுகுறிப்பிட தக்கது.

தமிழ் புத்தாண்டை இரதோற்சவமாகக் கொண்டு பத்துநாள் மகோற்சவமாக நடைபெறும்.

ஆலயத்தின் இருண்ட காலம்.

மேற்குறிப்பிட்ட விதமாக ஆலயம் வளர்ச்சி அடைந்து வரும் போது 1991 ஆம் ஆண்டு மகோற்சவத்திட்க்கு சில தினங்களுக்கு முன்னர் யுத்த சூழ்நிலை காரணமாக காரைநகர் மக்கள் சடுதியாக இடம் பெயர நேரிட்டது. இதனால் நித்திய நைமித்திய பூசைகள் 1997 ஆம் ஆண்டு ஆவணி மாதம் வரை நடைபெற வில்லை.

இருந்தும் வாரிவளவில் இடம்பெராராமல் இருந்த ஒரு சிலரால் கோவில் தேர் உட்பட பெறுமதியான பல பொருட்கள் பாதுகாக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் ஆலயத்தின் தேர் உட்பட பல பொருட்களை பாதுகாத்தவர்கள் என்றும் போற்றப் படவேண்டியவர்கள்.

1997 ஆம் ஆண்டு ஆவணி மாதம் அந்தரித்த பிரதிஷ்டா கும்பாபிஷேகம் நடை பெற்றது அதன் பின்னர் கோவில் தொண்டுகள் சிறப்பாக முன்னெடுக்கப் பட்டன.

தற்போது ஆலயம் புதிய பொலிவுடன் மிளிர்கின்றது.

No comments

Powered by Blogger.