விநாயகப்பெருமான் மனிதத் தலையுடன் உள்ள கோயில்


"சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே"

("suklaambharadharam vishnum sasivarnam chathurpujam
prasannavathanam dhyayeth sarva viknobha saanthaye
")
கொஞ்சமேனும் இறை நம்பிக்கை உடையவர்களில் பெரும்பாலோனோருக்கு இந்த சுலோகம் தெரிந்திருக்கும். குறைந்தது கேட்டாவது இருப்பார்கள். வடமொழியில் நடக்கும் எல்லா வழிபாடுகளும் இந்த சுலோகத்தைச் சொல்லியே தொடங்குகின்றன.


இதன் விளக்கம்
**************
சுக்லாம்பரதரம் - சுக்ல + அம்பர + தரம் = வெண்மையான ஆடையை அணிந்தவர் (பெரும்பாலும் விநாயகர் பீதாம்பரம் = பீத + அம்பரம் மஞ்சள் ஆடையை அணிந்தவராகத் தான் அறியப்படுகிறார். ஆனாலும் வெண்ணிற ஆடையை அணிந்தவர் என்பதில் எந்த முரணும் இல்லை).
விஷ்ணும் - எங்கும் நிறைந்திருப்பவர்
சசிவர்ணம் - சந்திரனைப் போன்ற நிறம் கொண்டவர்
சதுர்புஜம் - நான்கு கைகளை உடையவர்
ப்ரசன்ன வதனம் - மகிழ்ச்சி ததும்பும் அழகிய திருமுகத்தை உடையவர்
த்யாயேத் - தியானிக்கிறேன்
சர்வ விக்ன உபசாந்தயே - எல்லா தடைகளும் நீங்கட்டும்.




ஆதியும் அந்தமுமான ஈசனுக்கு மூத்த பிள்ளை ,அழகன் முருகனின் அண்ணன் விநாயகபெருமானை போற்றி இந்த வலை பதிவை துவங்குகிறோம்.யானை முகத்தான் நம் குறைகளை நீக்கி நிறைபல செய்யும் கணபதிநாதன் பற்றிய ஒரு தகவல். எங்கும் யானை முகத்தோடு கானப்படும் நம் விநாயகப்பெருமான்  தமிழ் நாட்டில் சிதம்பரத்தில் நடராஜர் சந்நிதி நுழைவாயில் முன் சற்று தள்ளி  காணப்படும் சிறு கோவிலில் மனிதத் தலையுடன்  காட்சி தருகிறார்.இது எங்கும் காணப்படாத அரிய தரிசனம் ஆகும்.

No comments

Powered by Blogger.